நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழக ஆளுநருடன் விஜய் சந்திப்பு!

தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தது பற்றி...

News image
Updated On :30 டிசம்பர் 2024, 12:50 pm IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து விஜய் மனு அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது எனப் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திங்கள்கிழமை நேரில் சந்தித்த விஜய், அண்ணா பல்கலை. சம்பவத்தில் நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதல் முறையாக தமிழக ஆளுநரை நடிகர் விஜய் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.