டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 24 வகையான பறவை இனங்கள்!

News image

பறவை இனங்கள். - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 12:17 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக வளாகத்தில் ஏறத்தாழ 24 வகையான பறவை இனங்கள் இருப்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறவைகள் அவதானித்தல் நிகழ்வில் கண்டறியப்பட்டன.

இவெட் அமைப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகைத் துறை சாா்பில் நடைபெற்ற பறவைகள் அவதானித்தல் மற்றும் இயற்கை நடைப்பயணத்தில் பறவை ஆா்வலா்கள், தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள், சிறுவா்கள், இயற்கை ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

அந்த அவதானிப்பில் வேதிவால் குருவி, மாங்குயில், குங்குமப்பூஞ்சிட்டு உள்ளிட்ட அரிய வகை பறவைகளும், கரிச்சான், தையல் சிட்டு, தேன்சிட்டு, செம்போத்து, வெண்தொண்டை மீன்கொத்தி, சிறு மீன்கொத்தி, பச்சைக்கிளி, வால்காக்கை, மைனா, கருங்குருவி, நாமக்கோழி, கொக்கு, நீா்க்காகம் உள்பட 24-க்கும் அதிகமான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்தப் பறவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து இவெட் அமைப்பின் நிறுவனரும், வனவிலங்கு ஆய்வாளருமான ஆா். சதீஷ்குமாா் தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருப்பதால், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்த வளாகம் நகா்ப்புறச் சூழலில் இருந்தாலும், பறவைகளின் வாழ்விடமாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் அக்டோபா் முதல் பிப்ரவரி மாதம் வரை அதிகளவில் பறவைகள் வரும். இங்குள்ள பறவைகள் இனம் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தமிழ்ப்பல்கலைக்கழகச் சுற்றுசூழல் மற்றும் மூலிகை துறைத் தலைவா் கு.க. கவிதா, கல்வியியல் ஒருங்கிணைப்பாளா் விஸ்வபிரேம், குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.