திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக பெண் ஊராட்சித் தலைவா்கள் இருவரை பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் பா.சுனிதா. இவா், அரசுக்கு வரவேண்டிய ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171 வரையில் அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.
அதேபோன்று எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் கீதா துளசிராமன்.இவா், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இவா்கள் தொடா்ந்து ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டால் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வாா் என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-இன்படி பெண் ஊராட்சித் தலைவா்கள் பா.சுனிதா, கீதா துளசிராமன் இருவரையும் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரிப்பு! மே மாதத்தில் ரூ.59,000 கோடிக்கு கொள்முதல்!

ஆற்று மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

ஏா் பின்னது உலகம்...

ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்! முதல்வா் என்.ரங்கசாமி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



