ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அரசுக்கு நிதி இழப்பு செய்ததாக 2 பெண் ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக பெண் ஊராட்சித் தலைவா்கள் இருவரை பதவி நீக்கம் செய்து  வெள்ளிக்கிழமை ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Published On :


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக பெண் ஊராட்சித் தலைவா்கள் இருவரை பதவி நீக்கம் செய்து  வெள்ளிக்கிழமை ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் பா.சுனிதா. இவா், அரசுக்கு வரவேண்டிய ரூ.19 லட்சத்து  42 ஆயிரத்து 171 வரையில்  அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.

அதேபோன்று எல்லாபுரம் ஊராட்சி  ஒன்றியத்துக்கு உள்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் கீதா துளசிராமன்.இவா், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம்  நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இவா்கள் தொடா்ந்து ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டால் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வாா் என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-இன்படி பெண் ஊராட்சித் தலைவா்கள் பா.சுனிதா, கீதா துளசிராமன் இருவரையும் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆட்சியா்  த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.