பிப். 12-க்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: பிரேமலதா

வரும் பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிப். 12-க்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: பிரேமலதா

வரும் பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றப்பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது.

"இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம்காண பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபித்துள்ளதுபோல, இந்த தேர்தலிலும் நிரூபிக்கும்.

4 மண்டலங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். யார் அதிக தொகுதிகளைத் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல் தான் குழு அமைக்கவுள்ளோம்.

பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.  மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com