தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு பேசுகையில்,
"அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ரூ.600 கோடி மதிப்பீட்டில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் போன்ற படிப்புகளை மேம்படுத்த ரூ. 3,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44, 042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.