47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

3ஆம் பாலினத்தவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்

அரசின் நிதியுதவியுடன் உயர்கல்வியில் முன்னேறும் திருநங்கைகள்

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 6:03 am

DIN

உயர்கல்வி பயில விரும்பும் 3ஆம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்வுக்கென பல்வேறு புதுமையான திட்டங்களை நாட்டிலேயே முன்னோடியாக தமிழநாடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

மூன்றாம் பாலினத்தவரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து, வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது மிககம் இன்றியமையாததாகும். எனினும் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே, உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதலாக அரசால் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.