சீமாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார்.
இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரவிக்குமார் பலியானார். மேலும் அவரது மனைவியும் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.