
சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன
ரயில்வே பாதையின் பக்கத்தில் 5 அடி உயரத்தில் புல் வளர்ந்து வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது
உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பொதுமக்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரயில் கடந்து செல்லும் பொழுது, காற்றின் வேகத்தால் தீ பரவக்கூடும் என்பதால் 20 நிமிடங்களுக்கு மேலாக மின்சார ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.