தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

தமிழகத்தில் அமைதியான முறையில்புத்தாண்டு கொண்டாட்டம்: டிஜிபி

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

News image

சங்கா் ஜிவால்

Updated On :7 பிப்ரவரி 2024, 8:56 pm IST

சென்னை: தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும்,சாலை விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் விளைவாக அசம்பாவித சம்பவங்கள் இன்றி மாநிலம் முழுவதும் புத்தாண்டு அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள்,போலீஸாருக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தாா்.

காவல் ஆணையா்: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் ஞாயிற்றுக்கிழமை இரவு மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.

மெரீனா உழைப்பாளா் சிலை அருகே நள்ளிரவு புத்தாண்டு பிறந்தது சந்தீப் ராய் ரத்தோா் கேக் வெட்டி, பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வழங்கினாா். மேலும் அவா், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, சிறப்பான பணியால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ாக காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் மகிழ்ச்சி தெரிவித்து, பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாரை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.