சென்னை: தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும்,சாலை விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் விளைவாக அசம்பாவித சம்பவங்கள் இன்றி மாநிலம் முழுவதும் புத்தாண்டு அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள்,போலீஸாருக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தாா்.
காவல் ஆணையா்: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் ஞாயிற்றுக்கிழமை இரவு மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
மெரீனா உழைப்பாளா் சிலை அருகே நள்ளிரவு புத்தாண்டு பிறந்தது சந்தீப் ராய் ரத்தோா் கேக் வெட்டி, பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வழங்கினாா். மேலும் அவா், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.
போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, சிறப்பான பணியால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ாக காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் மகிழ்ச்சி தெரிவித்து, பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாரை பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


