விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பென்னாகரம் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

பென்னாகரம் வன சரகத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.

News image

பென்னாகரம் வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானை

Updated On :2 ஜனவரி 2024, 9:54 am

பென்னாகரம் வன சரகத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.

கர்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது யானைக் கூட்டங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வருகின்றனர். தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்களிலிருந்து  யானைகள் பிரிந்து அவ்வப்போது பென்னாகரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிக்குள் நுழைகின்றன. 

கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் வனப்பகுதியில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட பேவனூர் காப்புக்காடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட பென்னாகரம் வனத்துறையினர் ஒற்றை யானையைக் கண்டுள்ளனர். யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறையினர், திங்கள்கிழமை காலை பேவனூர் காப்புக்காடு பகுதிக்கு உட்பட்ட ஐநூறுகுட்டை பகுதியில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி ஓடையில் கீழே விழுந்துள்ளது. 

இதனைக் கண்ட வனத்துறையினர், ஓசூர் மண்டல உதவி கால்நடை மருத்துவர் பிரகாஷ் உதவியுடன், வன சரக அலுவலர்கள் செந்தில்குமார் (பென்னாகரம்), ராஜ்குமார் (ஒகேனக்கல்), வனவர்கள் புகழேந்திரன், சக்திவேல், ரகுராமன் உள்ளிட்டோர் அடங்கிய வனக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் சிகிச்சையளித்து வந்த ஒற்றை ஆண் யானை உயிரிழந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு நிகழ்விடத்திற்கு வந்து இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானையைப் பார்வையிட்டு, யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், யானையின் இறப்பு குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் இறந்த ஒற்றை யானை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. மேலும் ஆண் யானையின் இரண்டு தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.