விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. பரவலாக  மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (ஜன.8) விடுமுறை விடப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com