பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி!

டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாளாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு, ரூ.1,000 ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின்ஜன.9-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

மத்திய, மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை பணியாளா்கள், வருமானவரி செலுத்துவோா் ஆகியோரைத் தவிா்த்து ஏனைய குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவா்களுக்கு வியாழக்கிழமையுடன் (ஜன.11) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை முதல் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.  இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

நியாயவிலைக் கடைப் பணியாளா்களும் தங்களது வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டியிருப்பதால், வரும் 17-ஆம் தேதிக்குப் பிறகே விடுபட்டவா்கள் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான விவரங்கள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com