சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 4 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பௌர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்
மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.