/

தொடர் போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

News image
Updated On :20 ஜனவரி 2024, 6:15 am

DIN


சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன.22 முதல் ஜன.24ம் தேதி வரை ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌கள் தொடர் போராட்ட பிரசார இயக்கம் நடத்த முடிவு‌ செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்; பிப்.5 முதல் பிப் 9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது (பாஜக, அதிமுக -வை தவிர்த்து);

பிப்.10ல் மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்டம் ஆயத்த மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 15-ம் தேதி முதல் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்போவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.