தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அரிச்சல் முனையில் பிரதமர் மோடி!

அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி,  அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து  தியாணம் செய்தார்.

News image
Updated On :21 ஜனவரி 2024, 7:35 am

DIN

அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி,  அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து  தியாணம் செய்தார். பின்னர், அரிச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கோதண்டராமா் கோயிலுக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள ஸ்ரீராமர், சீதா, அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.

பின்னா், ராமேசுவரத்திலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, மதுரை விமான நிலையத்துக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறார். இதையடுத்து, மதுரையிலிருந்து பகல் 12.35 மணிக்கு தனி விமானத்தில் தில்லி செல்கிறார்.

ராமேசுவரத்துக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) நண்பகல் 12 மணி வரை போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.