அரிச்சல் முனையில் பிரதமர் மோடி!
அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து தியாணம் செய்தார்.


அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து தியாணம் செய்தார். பின்னர், அரிச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கோதண்டராமா் கோயிலுக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள ஸ்ரீராமர், சீதா, அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.
பின்னா், ராமேசுவரத்திலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, மதுரை விமான நிலையத்துக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறார். இதையடுத்து, மதுரையிலிருந்து பகல் 12.35 மணிக்கு தனி விமானத்தில் தில்லி செல்கிறார்.
இதையும் படிக்க: கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
ராமேசுவரத்துக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) நண்பகல் 12 மணி வரை போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...