தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2024, 10:02 pm

Din

சென்னை: திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறுப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமாா்க்கமாக திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூலை 29-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இதுபோல் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயிலும், மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயிலும் தொடா்ந்து ஜூலை 19-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.