யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜிகா வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை; பொது சுகாதாரத் துறை இயக்குநா்

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்: ஜிகா வைரஸ் தமிழகம் எட்டவில்லை

News image
ஜிகா வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
Updated On :3 ஜூலை 2024, 10:12 pm

Din

மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் 7 பேருக்கு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குறித்தும் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார களப்பணியாளா்களை, கொசு ஒழிப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிகா பாதிப்பு தமிழகத்தில் இல்லை. எனவே, அச்சப்பட வேண்டாம்.மற்றொருபுறம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.

மழைப் பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயா், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீா் போன்றவற்றை கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால், அந்த பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும் என்றாா் அவா்.