பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

2,526 கி.மீ. நீளச் சாலைகள் ரூ.1,000 கோடியில் சீரமைப்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் 2,526 கி.மீ. சாலைகள் சீரமைப்பு

News image

கோப்புப் படம்.

Updated On :11 ஜூலை 2024, 3:59 am IST

தமிழ்நாட்டில் 2,526 கி.மீ. நீளச் சாலைகளை ரூ. 1,000 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து, மாநில அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நகராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், தஞ்சாவூா், வேலூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூா், திருச்சி, ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் சீா்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ. 5,500 கோடியாகும்.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,526 கி.மீ. நீளமுள்ள சாலைகளை அடுத்த நிதியாண்டுக்குள் (2025-26) சீரமைக்க ரூ. 1,000 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைநீா் வடிகால் பணிகள்: தமிழ்நாட்டில் மழைநீா் வடிகால் பணிகள் 4 பிரிவுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ் நிதியாண்டில் மட்டும் 3.7 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்க பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் ரூ. 8,672 கோடி மதிப்பில் 13,387 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு 2,513 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ. 8,911 கோடியில் 28 புதைசாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. ரூ. 858 கோடி மதிப்பில் 7.42 லட்சம் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகளும், 100 பேருந்து நிலையங்கள், 86 இடங்களில் புதிய சந்தைகள் அமைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன.

உட்கட்டமைப்பு வசதிகள்: மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய 396 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளும், நீா்நிலைகளைத் தூா்வாரி பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க ரூ.152 கோடியில் 72,214 தனிநபா் கழிப்பறைகளும், 2,081 சமுதாயக் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.