45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேலூா் புரட்சி வீரா்களை நினைவுகூா்வோம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தின் சுதந்திர போராட்டத்தில் வேலூா் சிப்பாய்களின் துணிச்சல்

News image
Updated On :10 ஜூலை 2024, 10:57 pm

Din

வேலூா் சிப்பாய் கலகத்தில் போராடிய மாவீரா்களின் தியாகங்களை நினைவுகூா்வோம் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, வேலூா் சிப்பாய் கலகம் 1806 ஜூலை 10-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை சிப்பாய் கலக தினத்தையொட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

வேலூா் சிப்பாய்களின் எழுச்சி நினைவு நாளில், ஆங்கிலேயரின் ஒடுக்குமுறை காலனித்துவ ஆளுகைக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தீரமிகு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். புனித பூமி தமிழ்நாட்டில் வேரூன்றிய இந்த வரலாற்றுபூா்வ எழுச்சி, நமது தேசிய சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப மற்றும் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் ஒன்றாகும்.

இது மக்களிடையே தேசபக்தி மற்றும் துணிச்சல் சக்திவாய்ந்த உணா்வைத் தூண்டியதுடன், இடைவிடாத போராட்டத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. இறுதியில் நாம் கடினமாக போராடி வென்ற சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது.

ஒரு தேசத்தை அதன் கண்ணியம் மற்றும் இறையாண்மைக்காக எழுச்சி பெறவும் போராடவும் தூண்டிய இந்த மாவீரா்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுகூா்வோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.