இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

செங்கோட்டை-புனலூர் மின் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்!

செங்கோட்டை-புனலூர் மின் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

News image
சோதனை ஓட்டம்
Updated On :13 ஜூலை 2024, 12:06 pm

DIN

செங்கோட்டை - புனலூர் இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில், மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

செங்கோட்டை - புனலூர் இடையே மொத்தமுள்ள 49 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த இந்த வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்மயமாக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கினால், இப்பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 7 மலைகளை இணைக்கும் வகையில் 8 கண் பாலம், 5 கண் பாலம், 3 கண் பாலங்கள் மற்றும் 3 மலைக்குகைகள் இருந்ததால், இப்பாதையை பிராட் கேஜ் பாதையாக அகலப்படுத்தும் பணி ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதையில் பிரமிக்க வைக்கும் குகைகள்!

பகவதிபுரத்தை அடுத்து உள்ள புளியரை என்ற இடத்தின் தரைப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான சாலை "ந" என்ற வடிவில் வளைந்து செல்லும். இந்த சாலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ரயில் செல்லும்.

இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் முதல் குகை வரும். இது ஆரிங்காவு பகுதிக்குச் செல்வதற்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.

கழுதுருட்டியினை ரயில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும்போது, பெரிய பாலம் ஒன்று வருகிறது. கழுதுருட்டி 13 கண் ரயில் பாலம் அது.

இங்கிருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இரண்டாவது குகை வரும். அடுத்த 100 மீட்டர் தொலைவில் மூன்றாவது குகை இருக்கும். இப்படியே தொடர்ந்து ஆறு குகைகள் வருகின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் புனலூர் ரயில் நிலையம் வருகிறது.

இந்த 49.38 தொலைவு ரயில் பாதையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளன. எனவே, இங்கு ரயில் குறைவான வேகத்தில்தான் செல்ல முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.