செங்கோட்டை - புனலூர் இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில், மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
செங்கோட்டை - புனலூர் இடையே மொத்தமுள்ள 49 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த இந்த வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்மயமாக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கினால், இப்பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 7 மலைகளை இணைக்கும் வகையில் 8 கண் பாலம், 5 கண் பாலம், 3 கண் பாலங்கள் மற்றும் 3 மலைக்குகைகள் இருந்ததால், இப்பாதையை பிராட் கேஜ் பாதையாக அகலப்படுத்தும் பணி ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதையில் பிரமிக்க வைக்கும் குகைகள்!
பகவதிபுரத்தை அடுத்து உள்ள புளியரை என்ற இடத்தின் தரைப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான சாலை "ந" என்ற வடிவில் வளைந்து செல்லும். இந்த சாலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ரயில் செல்லும்.
இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் முதல் குகை வரும். இது ஆரிங்காவு பகுதிக்குச் செல்வதற்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.
கழுதுருட்டியினை ரயில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும்போது, பெரிய பாலம் ஒன்று வருகிறது. கழுதுருட்டி 13 கண் ரயில் பாலம் அது.
இங்கிருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இரண்டாவது குகை வரும். அடுத்த 100 மீட்டர் தொலைவில் மூன்றாவது குகை இருக்கும். இப்படியே தொடர்ந்து ஆறு குகைகள் வருகின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் புனலூர் ரயில் நிலையம் வருகிறது.
இந்த 49.38 தொலைவு ரயில் பாதையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளன. எனவே, இங்கு ரயில் குறைவான வேகத்தில்தான் செல்ல முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிராம்பட்டினம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை!

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

விண்ணில் பாய்ந்த ‘விக்ரம் 1’-ல் பிரதமரின் அஞ்சல் அட்டை! என்னென்ன ஆய்வுகள்?

பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



