மதுரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை அருகே ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளால் பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஜூலை 10-ஆம் தேதி பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு செல்லாமல், மானாமதுரை, விருதுநகா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணிக்காக திருச்சி-பாலக்காடு ரயில் நாளை பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள்: திருச்சி-காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



