தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தெருக் கடைகளில் ரூ.100-க்கு மேல் விற்பனையானது.
தக்காளி விலை திடீரென அதிகரித்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளான நிலையில், இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், மொத்த சந்தையில் ரூ. 45-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சில்லறை கடைகளில் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

வரத்துக் குறைவு: மதுரையில் காய்கறிகளின் விலை உயா்வு
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை



