ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழங்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated on
1 min read

தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையோருக்கு பணம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் திமுக, அதிமுக, தமாக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
வன்முறை எதிரொலி: வங்கதேசம் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து

ரௌடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலையை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட கைது செய்யப்பட்டனா்.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
பின்லேடனின் நெருங்கிய உதவியாளர் பாகிஸ்தானில் கைது

கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com