எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பின்லேடனின் நெருங்கிய உதவியாளர் பாகிஸ்தானில் கைது

அல்கொய்தா மூத்த தலைவரும், பின்லேடனின் நெருங்கிய உதவியாளருமான அமின் அல் ஹக் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

புகைப்படம் - IANS

Updated On :19 ஜூலை 2024, 7:41 pm IST

1960 ஆம் ஆண்டு ஆப்கனில் ஹக், 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இவர், 1996 முதல் அல்-கொய்தா நிறுவனர் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அமின் அல் ஹக் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற நகரத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறையின் அடிப்படையிலான நடவடிக்கையின் போது பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜி உஸ்மான் அக்ரம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அமின் அல் ஹக் பாகிஸ்தானில் பெரிய அளவில் பயங்கரவாதத் திட்டத்தைத் அரங்கேற்றவிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஹக்கிற்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைதான ஹக் 2021 இல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டார். பாகிஸ்தானின் அடையாள அட்டையும் அவரிடம் உள்ளது. அதில் லாகூர் மற்றும் ஹரிபுரின் முகவரிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.