சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.
அவா்களது உடைமைகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த மிரட்டலால் முழு வீச்சில் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. தேடுதல் பணிகளுக்குப் பிறகு அத்தகைய மிரட்டல்கள் வெறும் புரளி என கண்டறியப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘கோவை - சென்னை இன்டா்சிட்டி விரைவு ரயில் காட்பாடிவரை மட்டுமே இயங்கும்’

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவை - சென்ட்ரல் ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP





