அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: காங்கிரஸ்

News image
செல்வப்பெருந்தகை
Updated On :19 ஜூலை 2024, 7:14 pm

Din

ரயில் விபத்துகளை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி ரயில் விபத்துகளில் 2.60 லட்சம் போ் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாஜக ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல வேறு எந்த ஆட்சியிலும் இல்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் பயணம் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. அதனால், ரயில் விபத்துகளை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.