பால் உற்பத்தியில் இடையூறு: ஆவின் விளக்கம்
சென்னை அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சென்னை அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாலும், இப்பணிகள் வரும் 16-ஆம் தேதிவரை நடைபெறும் என்பதாலும், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை மக்களுக்கு பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, சென்னையில் உள்ள பிற பால் பண்ணைகளில் இருந்தும், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பால் பண்ணையிலிருந்தும் 1.50 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, விநியோகிக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பால் விநியோகிக்க அனைத்து வகை முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...