தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜூன் 4 - புதிய விடியல்: தொல். திருமாவளவன்

ஜூன் 4 இல் புதிய விடியல் மலரவுள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

News image

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்

Updated On :2 ஜூன் 2024, 11:57 am

DIN

ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது; இந்தியாவைச் சூழ்ந்த இருளும் அகலவுள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

வி.சி.க. தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னை ராஜா மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் 100 சதவிகிதம் பாஜக வெற்றிபெறப் போவதில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவும் எடுக்கப்படும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையெல்லாம் நாம் ஒரு போதும் பொருட்படுத்தவில்லை. நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும். ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது; இந்தியாவைச் சூழ்ந்த இருளும் அகலவுள்ளது" எனக் கூறினார்.

மேலும் “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு என்று சொல்வதை விட தமிழர்களின் வரலாறு என்று சொல்வது தான் சரியாக இருக்கும். கருணாநிதி ஒரு போராளியாகப் பிறந்து, போராளியாக வாழ்ந்து, போராளியாகவே மறைந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிற்பி கருணாநிதி” என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.