காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வரலாற்றில் முதல்முறை! 7 இடங்களில் அதிமுக டெபாசிட் இழப்பு!

39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 பேர் வைப்புத் தொகை இழப்பு.

News image
Updated On :6 ஜூன் 2024, 8:30 am IST

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 863 போ் வைப்புத் தொகையை இழந்ததாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. பிரதான எதிா்க்கட்சியான அதிமுக ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்தனா்.

உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளா் போட்டியிட்ட நாமக்கல் உள்பட 22 தொகுதிகளில் திமுகவும், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோன்று, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி தன் வசமாக்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்துள்ளனா்.

ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவா்களது வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதில் குறிப்பாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 34 வேட்பாளா்களில் 7 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். தென் சென்னை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூா், கன்னியாகுமரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா். 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது.

அந்தக் கட்சி வட சென்னை, சிதம்பரம், கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், தஞ்சாவூா், திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விருதுநகா் ஆகிய தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போடியிட்ட பாமக, திண்டுக்கல், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்துள்ளன.

தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளில் மத்திய சென்னை மற்றும் திருவள்ளூா் தொகுதியில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. நாம் தமிழா்கட்சி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும், தமாகா போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூா், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.