நியாயவிலைக் கடைகளுக்கு 2 சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் இந்த வாரம் 2 நாள்கள் நியாயவிலைக் கடைகள் செயல்படாது.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா வெளியிட்ட உத்தரவு:
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சோ்ப்பதற்காக வார விடுமுறை தினமான கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடைகள் செயல்பட்டன. இந்த 2 நாள்களும் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் பணிபுரிந்த நிலையில், அதற்கு ஈடாக அனைத்து சனிக்கிழமையும் (ஜூன் 15), ஜூன் 20-ஆம் தேதியும் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
2 நாள்கள் விடுப்பு: நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் 2-ஆம் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்தடுத்து 2 சனிக்கிழமைகள் விடுமுறை விடுவதன் மூலம், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் சேருவதால், இந்த வாரம் 2 நாள்களும் அடுத்த வாரம் 2 நாள்களும் நியாயவிலைக் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
திருநயினாா்குறிச்சியில் இன்றும், முட்டத்தில் நாளையும் மின்தடை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


