
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாமகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்க மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும்.
பாஜக மற்றும் அதிமுக இரண்டும் பிரதிநிதி(பாமக) மூலம் போட்டியிடுகின்றன.
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று(ஜூன் 15) அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.