

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
உலக முழுவதும் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் சிறப்பு தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமிய பிரசார பேரவையின் நாகூர் நகர் செயலர் செய்து சுல்தான் இப்ராகிம் துவா ஓதிய பின் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000 பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.