பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியீடு: பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

பூந்தமல்லியில் புகாரைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியானதால், பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

News image

dinmani online

Updated On :23 ஜூன் 2024, 9:26 pm

பூந்தமல்லியில் புகாரைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியானதால், பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர், குடும்ப பிரச்னை காரணமாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரைப் பதிவு செய்து வழக்கை விசாரிக்க காவல் ஆய்வாளர் இந்திராணி (படம்) ரூ.2,000 கேட்டதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த ஆடியோ ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் ஆய்வாளர் இந்திராணியை நேரில் அழைத்து விசாரித்தனர்.

கடந்த வாரம் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் காவலர்களுடன் சேர்த்து போக்úஸô வழக்கில் சம்பந்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு வளைகாப்பு நடத்திய சம்பவத்தில் ஆய்வாளர் இந்திராணியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது. தற்போது வழக்கு தொடர்பாக புகாரைப் பதிவு செய்ய அவர் ரூ.2,000 லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியான நிலையில், காவல் ஆய்வாளர் இந்திராணியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஞாயிற்றுக்கிழமை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.