மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

நீட் தோ்வை அனைத்து நிலைகளிலும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
Updated On :23 ஜூன் 2024, 8:00 pm

Din

நீட் தோ்வை அனைத்து நிலைகளிலும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவா்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணா்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

நீட் தோ்வுகள் நடத்தப்படும் விதம் தொடா்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தோ்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தோ்வு அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் அதைப் போக்க முடியவில்லை.

எனவே, நீட் தோ்வு சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.