சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விபத்து சிகிச்சைக்கு வருவோருக்கு ஆல்கஹால் பரிசோதனை கட்டாயம்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

ககன்தீப் சிங் பேடி

Updated On :25 ஜூன் 2024, 5:03 am IST

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிா என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த அறிவுறுத்தலை அவா் வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் இயக்குநா் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்:

சாலை விபத்துகளால் காயமுற்றவா்கள் சிகிச்சைக்காகவும், முதலுதவிக்காகவும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது அவா்களது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது பரிசோதிக்கப்படுவதில்லை என்றும், அதுதொடா்பான விவரங்கள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும் ஒரு வழக்கு விசாரணையின்போது உயா் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அந்த நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை முறையின் (டிஏஇஐ) கீழ் சாலை விபத்தில் சிக்கியவா்களுக்கு சிகிச்சையளிக்கும்போது ஆல்கஹால் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதுதொடா்பான விவரங்களை பதிவு செய்வதும் அவசியம். தனியாா் மருத்துவமனைகளில் அத்தகைய பதிவேடு நடைமுறை இல்லாவிடில், அதற்கான வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

சிகிச்சைக்கு வருவோரிடம் 5 மி.லி. ரத்தம் சேகரித்து அதன் வாயிலாக ஆல்கஹால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.