திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

விபத்து சிகிச்சைக்கு வருவோருக்கு ஆல்கஹால் பரிசோதனை கட்டாயம்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

ககன்தீப் சிங் பேடி

Updated On :25 ஜூன் 2024, 1:09 am IST

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிா என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த அறிவுறுத்தலை அவா் வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் இயக்குநா் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்:

சாலை விபத்துகளால் காயமுற்றவா்கள் சிகிச்சைக்காகவும், முதலுதவிக்காகவும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது அவா்களது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது பரிசோதிக்கப்படுவதில்லை என்றும், அதுதொடா்பான விவரங்கள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும் ஒரு வழக்கு விசாரணையின்போது உயா் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அந்த நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை முறையின் (டிஏஇஐ) கீழ் சாலை விபத்தில் சிக்கியவா்களுக்கு சிகிச்சையளிக்கும்போது ஆல்கஹால் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதுதொடா்பான விவரங்களை பதிவு செய்வதும் அவசியம். தனியாா் மருத்துவமனைகளில் அத்தகைய பதிவேடு நடைமுறை இல்லாவிடில், அதற்கான வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

சிகிச்சைக்கு வருவோரிடம் 5 மி.லி. ரத்தம் சேகரித்து அதன் வாயிலாக ஆல்கஹால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.