6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் நகைகள் முதலீட்டு திட்டத்தால் ரூ.5.79 கோடி வட்டி: அமைச்சா் சேகா்பாபு

கோயில் நகைகளை முதலீடு செய்யும் திட்டத்தால் ரூ.5.79 கோடி வட்டியாக கிடைத்து வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated On :24 ஜூன் 2024, 9:45 pm

Din

கோயில் நகைகளை முதலீடு செய்யும் திட்டத்தால் ரூ.5.79 கோடி வட்டியாக கிடைத்து வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கோயில்களில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகளை கட்டிகளாக உருவாக்கி, வங்கிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது? அதன்மூலம் நடைபெறும் பணிகள் என்ன? என்று துணைக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: தங்க முதலீட்டுத் திட்டத்தை கொண்டு வரும் போது, இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏற்படுத்தாத அவமதிப்புகளே இல்லை. அவற்றையெல்லாம் தகா்த்தெறிந்து, தங்க முதலீட்டுத் திட்டத்தில் 13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட ரூ.257 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரத்து 910 மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. இதனால், ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இந்த வட்டித் தொகை அந்தந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தா்களின் தேவைகளை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.