வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை தமிழா் முகாம்களில் மனநல சேவை வழங்கும் திட்டம்

மனநல சேவைகள்: இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் புதிய முயற்சி

News image
Updated On :26 ஜூன் 2024, 7:27 pm

Din

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மனநல சேவைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகமெங்கும் உள்ள 103 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மனநல சேவைகள் வழங்கும் திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.