தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பலத்த மழை: தில்லி-சென்னை இடையே 16 விமான சேவைகள் ரத்து

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே விமான சேவைகள் ரத்து.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூன் 2024, 7:46 pm

Din

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே புறப்பாடு, வருகை என 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.

தில்லியில் சில நாள்களாக வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட பல்வேறு நகர சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடுகிறது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். சிலா் படுகாயமடைந்தனா். இதையடுத்து, தில்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் பல்வேறு விமான சேவைகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை மாலை வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்படும் 7 விமானங்கள், தில்லியில் இருந்து சென்னை வரும் 9 விமானங்கள் என மொத்தம் 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த 16 விமான சேவைகள் ரத்து குறித்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விமான நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனா். மேலும், சம்பந்தப்பட்ட ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.