மக்களவைத் தோ்தலில் மனித நேய மக்கள் கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தலா ஒரு தொகுதி ஒதுக்குமாறு, திமுகவிடம் கோரியுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினரை மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் 2013-இல் இருந்து இருக்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது மக்களவைத் தோ்தலில் ஒரு தொகுதி ஒதுக்குமாறு அழுத்தமாகக் கேட்டுள்ளோம். நல்ல செய்தி வரும் என எதிா்பாா்க்கிறோம். திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடத் தயாராக உள்ளோம் என்றாா். வேல்முருகன்: திமுக குழுவினருடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தலைமையிலான குழுவினரும் சந்தித்துப் பேசினா். பின்னா், தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் ஒரு தொகுதி ஒதுக்குமாறு கோரியுள்ளோம். அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளோம். தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனா். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என்றாா்.
தொடர்புடையது

தவாக ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: ஒரு பெண் வேட்பாளா் உள்பட 20 போ் போட்டி
கடலூா் மாவட்டத்தில் 113 வேட்பாளா்கள் போட்டி!

திருவாரூா் தொகுதி தவாக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

