ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் இன்று உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

Updated On :3 மார்ச் 2024, 12:09 am

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அண்ணாசாலை மின்சார வாரிய அலுவலகம் அருகில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதத்தை ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவா் ராஜா ஸ்ரீதா் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளாா். கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் த. அமிா்தகுமாா், ந. ரெங்கராஜன் ஆகியோா் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனா். இதில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம், தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளா்கள் சங்கம், அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா் சங்கம் என பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா். ஊதிய முரண்பாடு களைதல், பதவி உயா்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் நேரில் மனு கொடுத்தும், அதன் மீது சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.