தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் சேகர்பாபு

பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)

சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கியப் பின் அவர் பேசியதாவது:

”தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறைகூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்; எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் டெபாசிட் கூட பெற இயலாது.

அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை ”என்று பேசினார்.

நேற்று நடைபெற்ற சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, சென்னையில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது, மக்கள் அவதிப்பட்டதாகவும் ஆனால், திமுக அரசு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக துயரத்தை மேலும் அதிகரிக்கும் வேலையைச் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com