குரூப் 1 தேர்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) இன்று(மார்ச். 7)வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு முன்னதாக நடைபெற்றது.

இத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்தாண்டு குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மார்ச். 7) வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
ரூ.50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை வாய்மொழித் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com