அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கோடை கால சுற்றுலாப் பேருந்து: மக்கள் முன்பதிவு செய்யலாம்

உதகை, கொடைக்கானல் ஆகிய மலை வாழிடங்களுக்கு சுற்றுலாப் பேருந்துகள்

News image
Updated On :8 மார்ச் 2024, 8:30 pm

Din

கோடை காலங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலாப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியதாவது:

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகை தரவுள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் உதகை, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்கு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற கோடை விடுமுறையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களின் மூலம் சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளலாம். சுற்றுலா தலங்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநா் சி.சமயமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.