கோடை காலங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலாப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் பேசியதாவது:
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகை தரவுள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் உதகை, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்கு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற கோடை விடுமுறையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களின் மூலம் சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளலாம். சுற்றுலா தலங்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநா் சி.சமயமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தக்காளி, கத்திரி நாற்றுகள் பெற முன்பதிவு செய்யலாம்

ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தில்லி முழுமையான சுற்றுலாத் தலமாகத் திகழ வேண்டும்: முதல்வா் குப்தா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



