சென்னை: சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு சம்மந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில் ஜவுளி, கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார்.
ரேஷன் பொருள் வினியோக முறைகேடு, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை வேப்பேரி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆர்.ஏ புரம், ராஜா அண்ணாமலைபுரம், இ.சி.ஆர் உள்ளிட்ட பத்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் 7 பேர் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

செந்தில்பாலாஜி மீதான வழக்கைத் தொடர அனுமதி கோரி அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்
அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்

அமலாக்கத் துறை சோதனை மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது: முதல்வா் சித்தராமையா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




