சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Published on

சென்னை: சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு சம்மந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரைச் சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில் ஜவுளி, கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார்.

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
கோடை கால சுற்றுலாப் பேருந்து: மக்கள் முன்பதிவு செய்யலாம்

ரேஷன் பொருள் வினியோக முறைகேடு, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை வேப்பேரி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆர்.ஏ புரம், ராஜா அண்ணாமலைபுரம், இ.சி.ஆர் உள்ளிட்ட பத்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் 7 பேர் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com