கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, அதிமுக நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி புகார் மனுவை அளித்துள்ளார்.
ஜாபர் சாதிக் வழக்கை நியமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டும் என்று புகார் மனுவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.