/

ஆளுநருடன் இபிஎஸ் சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை, அ.தி.மு.க. பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார்.

News image
Updated On :10 மார்ச் 2024, 6:56 am

DIN

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, அதிமுக நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி புகார் மனுவை அளித்துள்ளார்.

ஜாபர் சாதிக் வழக்கை நியமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டும் என்று புகார் மனுவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.