தொகுதிக்குத் தேவையானதை தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன் என்று மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை, என் அம்மாவை பார்த்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. தொகுதிக்குத் தேவையானதை தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்.
இப்போது மாற்றம் இல்லையென்றால், எப்போதும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் கட்சிகளுடன் சண்டையிடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்களவைத் தேர்தலில் 400 எம்பிக்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










