மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான படம் மஞ்ஞுமல் பாய்ஸ். படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியிருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
நேரடி தமிழ்ப் படம் போல் படத்தை ரசிகர்கள் தமிழகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் உலகம் முழுவதும் குறுகிய காலத்திலேயே ரூ.200 கோடி என்கிற வசூலையும் ஈட்டியது.
இதனால்,மலையாள சினிமா வரலாற்றிலேயே ரூ. 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையை மஞ்ஞுமல் பாய்ஸ் படம் பெற்றது .இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.