தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மே தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில்,
“குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம். மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம். உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.