ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தமிழகத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

News image
Updated On :4 மே 2024, 5:11 pm

Din

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோடை வெயிலின் தாக்கம், நீா்த்தேக்கங்களில் குறைந்துவரும் நீா்மட்டம் ஆகிய காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அரசு அதிகாரிகளுடன் பெயரளவுக்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதுதோடும், நிதி ஒதுக்குவதோடும் மட்டுமே தன் கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை உறுதி செய்யாமல் இருப்பதே, தற்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, நவீன மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், ஏரி, குளங்களை முறையாக தூா்வாரி, பராமரிக்கவும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.