பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், இரட்டையர்கள் இருவரும் தலா 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
நிர்மல், நிகில்.
நிர்மல், நிகில்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச் சகோதரர்கள். இவர்கள் இருவரும் இன்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் தலா 478 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நிர்மல், நிகில்.
பொறியியல் படிப்புகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இரட்டைச் சகோதரர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து, ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com